இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்! இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட சாந்தனின் உடல், மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பின்னரே அது யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சாந்தனின் உடலை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

சாந்தனின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் ஊடகத்திற்கு அவரது குடும்பத்தார் வழங்கிய தகவலின்படி, யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பின்னர் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சாந்தனின் உடலைத் தாங்கி விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது என எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இருந்து தரைவழியாக சாந்தனின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Back to top button