இலங்கைஆசியா

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. விண்ணப்ப இறுதித் திகதி 2023 டிசம்பர் 31 ஆகும். தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு எதிர்வரும் 2024 ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளில் காலியாக உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம்

கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் www.doenets.lk இணையத்தளத்தில் “Online Applications – Recruitment Exams” என்பதன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

Back to top button