
பெப்ரவரி மாதத்தில்கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வளி வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அண்மைக்காலமாக இலங்கையில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதுடன், இதுதொடர்பில் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.