இலங்கை

வரி பதிவு எண் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்கள் அனைவருக்கும் வரி பதிவு எண் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அனைத்து மக்களும் வரி செலுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது.

சட்ட சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து தகவல்களைப் பெறுவதன் மூலம், வரி பதிவு எண்ணை ஆன்லைனில் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்க அரசாங்கம் விரும்புகிறது.

“தற்போதுள்ள அரச நிறுவனங்களிடம் இருந்து மக்களின் வரிப் பதிவு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவல்களைப் பதிவு செய்த பின்னர், அனைத்து மக்களுக்கும் வரி பதிவு எண் வழங்கப்படும்.”

Back to top button