இலங்கை

தமிழர் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய வான் மோதி ஏற்பட்ட விபத்தில் 11பேர் காயம்

இன்று (10.11.2023) திருகோணமலை ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வாகனம் வீதியோர மின்கம்பத்துடன் மோதியே இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Back to top button