இலங்கை

கொழும்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 பேர் காயம்; 6 பேரின் நிலை கவலைக்கிடம் – தீயை கட்டுப்படுத்த போராட்டம்

கொழும்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் அறுவர் பலத்த தீக்காயங்களுக்கு உட்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் ஆடை விற்பனையகம் தவிர்ந்த ஏனைய சில கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்திற்கு உள்ளான கட்டிடம் ஒரு ஆடை விற்பனையகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக, காலையில் ஊழியர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் தீப்பற்றியிருக்கலாம் என அருகிலுள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button