உடல்நலம்

இதோ ஒற்றை தலைவலிக்கு ஒரு தீர்வு!!

பொதுவாக ஒற்றைத் தலைவலி என்பது மிதமான அல்லது கடுமையான தலைவலி, தலையின் 1 பக்கத்தில் துடிக்கும் வலியாக உணரப்படுகிறது.

பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மற்றும் ஒளி அல்லது ஒலிக்கு அதிக உணர்திறன் போன்ற அறிகுறிகளும் உள்ளன. ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான சுகாதார நிலை, ஒவ்வொரு 5 பெண்களில் 1 பேரையும், ஒவ்வொரு 15 ஆண்களில் 1 பேரையும் பாதிக்கிறது.

ஒற்றை தலை வலி ஏற்படக் காரணம் என்ன?
ஒற்றை தலைவலி நபரைப்பொறுத்து வேறுபடும்.

ஒற்றை தலைவலி ஏற்பட பொதுவான காரணம் என்னவெனில் மன அழுத்தம்.

சில பேருக்கு அதிகபடியான வெளிச்சத்தினால் ஏற்படுகிறது.

ஸ்ட்ரோங்கான வாசனைத்திரவியங்களின் மணம் போன்றவற்றாலும் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது.

உங்களுக்கு ஏற்படும் தலை வலி மைக்ரேன் தானா என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

மைக்ரேன் வலி தோன்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு ஒளி, அல்லது லேசான மூடுபனி. மங்களான பார்வை. உங்கள் தலையின் ஒரு பக்கத்தில் வலி போன்றவை ஏற்படலாம்.

குணப்படுத்தும் வழிகள்
சிறிய மசாஜ் ஒன்று தலைக்கு வழங்குதல்.

கனமான வாசனை அல்லாது மெல்லிய வாசனையை கொண்டுள்ள எஸ்ஸென்ட்யல் ஆயிலை பயன்படுத்தி மசாஜ் கொடுக்க வேண்டும்.

சில பேருக்கு கோப்பி அருந்தும்போது வலி குறையும்.

சில பேருக்கு அதிகபடியான நீரிழப்பினால் கூட வலி ஏற்படும்.

ஆகையால் நீரிழப்பினை சரி செய்யும் வகையில் தண்ணீர் தெிகமாக அருந்துதல் வேண்டும்.

கற்றாளை பானம் அல்லது எலுமிச்சை பானம் மற்றும் இஞ்சி டீ போன்றவற்றை கூ்ட அருந்தலாம்.

பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் .

இவற்றிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டசத்துக்கள் மூளை செயற்பாட்டினை நரம்புகளை சரியாக்க உதவும்.

அப்படி கூட சரியாகவில்லை என்றால் மருத்துவரை நாடுவது அவசியம்.

Back to top button