ஆன்மிகம்

30 ஆண்டுகளுக்கு பின் ஐப்பசி பௌர்ணமி; யோகத்தை பெறப் போகும் 3 ராசிக்காரர்கள்

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகிய இரண்டு வானியல் நிகழ்வுகளும் ஒரு ஆண்டில் 4 முறை நிகழும். அதில் 2 சூரிய கிரகணங்களும், ஒரு சந்திர கிரகணமும் நிகழ்ந்துவிட்டன. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அப்டோபர் 28 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் ஐப்பசி மாத பௌர்ணமியில் நிகழ்கிறது. ஜோதிடத்தில் இந்த சந்திர கிரகணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு பின் ஐப்பசி பௌர்ணமியில் நிகழவுள்ளது. அதே வேளையில் இந்த பௌர்ணமியில் கஜகேசரி ராஜயோகமும் உருவாகவுள்ளது. இதனால் இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருகிற சந்திர கிரகணமானது நன்மைகளை வாரி வழங்கும். சிலருக்கு விருப்பங்கள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடிக்கப்படும். செய்யும் காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், சம்பள உயர்வையும் பெறக்கூடும். காதலிப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த சந்திர கிரகணத்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவாகும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல பலன்களை வழங்கும். சிலர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். சில விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது சிறப்பான பலன்களை வழங்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளை பெறுவார்கள். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் காண்பார்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

Back to top button