ஆன்மிகம்

கனவில் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து கனவு சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. ஒரு கனவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கனவு அறிவியலிலும் துள்ளியமாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் நம்மில் பெரும்பாலானோர் காகங்களை ஒருமுறையாவது கனவில் பார்த்திருப்போம்.

பொதுவாகவே பலருக்கு காகங்களுக்கு பயம் இருக்கும். உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது. இதற்கிடையில், கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது. இப்படிப் பார்த்தால் ஏதோ நடக்கக் கூடாதது நடக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

கனவில் பறக்கும் காகம் கூட வரக்கூடாது என்கிறது கனவு அறிவியல். கனவில் காகம் பறப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கனவில் பறக்கும் காகத்தை கண்டால், நீங்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது பல பிரச்சனைகளை குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேரம் மற்றும் பணம் இரண்டும் வீணாக்கப்பட வாய்ப்பு உள்ளது என எம்மை நம் ஆழ் மனம் எச்சரிப்பதாக கூட அமையலாம். கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க கனவில் காகத்தை பிடித்திருப்பதை கண்டால் அது நல்ல அறிகுறி என்கிறது கனவு அறிவியல். இப்படி காகம் தோன்றினால் உங்கள் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும், வீட்டில் சாதகமான சூழல் நிலவும் என நம்பப்படுகின்றது. காகங்கள் கனவில் தொடர்ந்து தென்பட்டால் பித்ருக் கடவுள்கள் தொடர்பான கர்மங்கள் நீங்கியதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க பொதுவாகவே காகங்களை நமது முன்னோர்களாக சித்தரிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. எனவே காகம் பற்றிய கனவுகள் நமது முன்னோர்களின் எச்சரிக்கையாகவே கருதப்படுகின்றது.

Back to top button