இலங்கை

நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: அடுத்த வாரம் கிடைக்கவுள்ள பணம்

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான நலன்புரி நன்மைகள் கொடுப்பனவின் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க விளக்கமளித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் பணம்
இதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்திற்குள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர ்செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button