இலங்கை

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையர்களில் குறைந்த வருமானமுடையவவருக்கு அஸ்வெசும நிவாரணத் திட்டம் அதிரிக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதியளித்துள்ளார். அஸ்வெசும நன்மைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண கொடுப்பனவுகளை வழங்கும் பணி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இந்த மாதத்திற்குள்ளேயே வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button