இலங்கை

வட மாகாண பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்காக 401 பேர் நியமனம்

இன்று (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதிபர் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கே இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை திருமதி அழகி சாமிகாவிற்கு கிடைத்த வாய்ப்பு இலங்கை திருமதி அழகி சாமிகாவிற்கு கிடைத்த வாய்ப்பு இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட புதிய நியமனங்களுடன் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Back to top button