இலங்கை

கொழும்பு – கிராண்பாஸ் பகுதியில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து

இன்று (17.11.2023) கொழும்பு – கிராண்பாஸ் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் சிறியளவான தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. பபா புள்ளே பகுதியில் கட்டடமொன்றில் பிற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உடனடியாக சம்பவம் தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Back to top button