ஏனையவை

அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர இதுதான் நிரந்தர தீர்வு: இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்க

இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும். முடி உதிர்தல், நரைமுடி, பொடுகு பிரச்சனை, வறண்ட முடி, சொட்டை விழுகுதல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் நிறுத்திவிடும். அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு இந்த ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. இதனை எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்
கருவேப்பிலை- 1 கைப்பிடி
வெந்தயம்- 2 ஸ்பூன்
மிளகு- 1/2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை- 2
தேங்காய் எண்ணெய்- 200ml
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
விட்டமின் இ கேப்ஸுல்- 2
கற்றாழை ஜெல்- 2 துண்டு
சாதம் வடித்த தண்ணீர்- 1 கப்

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை, வெந்தயம், மிளகு, பிரிஞ்சி இலை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த பொடியை சேர்த்து மிதமான தீயில் 15-20 நிமிடம் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறி வரும்பொழுது அடுப்பை அனைத்து நன்கு ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல் மற்றும் சாதம் வடித்த கஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும். அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள எண்ணெய் 3 ஸ்பூன் ஊற்றி நன்கு அரைக்கவும்.

அரைத்து ஹேர்பேக்கை ஒரு பௌலில் மாற்றி உச்சந்தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவேண்டும்.

மசாஜ் செய்து 1 மணி நேரம் அப்படியே ஊறவைத்து தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசவேண்டும்.

இப்படி தொடர்ந்து வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் தலைமுடி எவ்வித பிரச்சனைகளுமின்றி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Back to top button