இலங்கை

வெளியான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி; கொழும்பு பல்கலை. சட்டபீடத்திற்கு தெரிவான மலையக மாணவி!

வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பதுளை மாவட்ட – பசறை பிரதேசத்தில் கோணக்கலை பெருந்தோட்ட சமூகத்தின் விடிவெள்ளியாக தோற்றம்பெற்றுள்ள காவத்தையூர் ஜீவராஜா உமேஷா கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்திற்கு தெரிவாகி வரலாற்று சாதனை ப்டைத்துள்ளார். இவ்வகையான பெருமைக்கே இத்தனைகாலம் ஏங்கித்தவித்தோம் என குறிப்பிட்டுள்ள பாடசாலையின் பழையமாணவர்கள் தமது நன்றியையும் பகிந்து கொண்டுள்ளனர்.

அவ்வகையில் மாணவியை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்த ஆரம்ப பிரிவு, இடைநிலை, உயர்தர வகுப்பு ஆசிரிய உறவுகள், முன்னாள் அதிபர் எஸ். நவரட்ணராஜா, தற்போதைய அதிபர் எஸ். ராஜேந்திரா ஆகியோர் உட்பட அனைவருக்கும் பாடசாலை பழைய மாணவர்கள் நன்றி கூறியுள்ளனர். அதேவேளை கோணக்கலை பெருந்தோட்ட மக்களுக்கும் , தனது சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவியை பலரும் பாராட்டி வருகின்றன.

Back to top button