இலங்கை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் விற்பனை செய்தவர் கைது

யாழ் நகரில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைபொருள் விற்பனை செய்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகில் குறித்த சந்தேகநபர் போதைபொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது இன்று (11.12.2023) அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது 33 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைபொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Back to top button