இலங்கை

யாழ். பல்கலைக்கழக தென்னிலங்ககை மருத்துவ பீட மாணவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் அநுராதபுரம் – ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் குறித்த மாணவர் அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட லேகியப் பொதிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இதனை அடுத்து மாணவனை கைது செய்த கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனார்.

Back to top button