இலங்கை

நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேக்கரி தொழிற்துறையினரும், பேக்கரி உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், அதிகரிப்பினால் ஏற்படும் பாரிய நட்டத்தை பேக்கரி உரிமையாளர்களே சுமக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

Back to top button