இலங்கை

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 49 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர், நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளவத்தை, தயா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பிரேமிலா ஞானகணேசன் என்ற பெயரில், பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து கல்லூரியின் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். இவர் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்தவர்.

சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button