இலங்கை

நாட்டில் எரிவாயு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும், அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான புதிய கொள்வனவு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை கொள்வனவு செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பில்லியன் டொலர்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 120 மில்லியன் டொலர் மானியம் பயன்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Back to top button