ஆன்மிகம்

நெருப்பு கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் இராசிக்காரர்கள்

ஐந்து வருடத்திற்கு பிறகு சூரியனும் செவ்வாயும் மகர ராசியில் சந்திக்க உள்ளனர். நெருப்பு கிரகமான சூரியன் மற்றும் செவ்வாய் சேர உள்ளனர். சூரிய பகவான் ஒரு செயலை செய்ய எண்ணத்தைக் கொடுப்பவராகவும், செவ்வாய் பகவான் அந்த செயலை செய்து முடிக்க கூடிய உத்வேகத்தைத் தரக்கூடியவராக இருப்பவர்.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மேஷம், ரிஷபம் உள்ளிட்ட ராசிகளுக்கு சுகப்பலன்கள் காத்திருக்கிறது. சூரிய பகவான் கடந்த ஜனவரி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். மகர சங்கராந்தி வழங்கியுள்ள நிலையில்,எதிர்வரும் (05.01.2024) திகதி கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவானும், மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சூரியன் மற்றும் செவ்வாய் இணைவதால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. இதனால் உடல் ரீதியாக பலமும், செயலில் உறுதித் தன்மையும் ஏற்படும்.

மேஷம்
மேஷ ராசிக்கு ஆதித்ய மங்கள ராஜயோகத்தால் மிகவும் சுப பலன்கள் பெறுவீர்கள்.

உங்களின் தொழிலில் மகத்தான வெற்றியை பெற்றிடலாம். செல்வ நிலை உயர வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான சாத்தியங்கள் உண்டு.

தொழிலில் வெற்றி உண்டாகும். புதிய சாதனைகளை படைப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவதன் மூலம்,. இக்கட்டான சூழலை எளிதாக சமாளிக்க முடியும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

கல்வித்துறையில் மகத்தான வெற்றியை பெற்றிடலாம். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சமூகத்தில் உங்களின் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்மராசி அதிபதியான சூரியனும் சந்திரனும் ஆறாம் இடமான கடன், நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளனர்.

இதனால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

மாணவர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான வெற்றியை பெற்றிடலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.

பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டு.

Back to top button