இலங்கை

நாட்டில் மீண்டும் பாரியளவில் அதிகரித்த முட்டை விலை… இன்று முதல் அமுலில்!

வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலைகள் இன்று (21-01-2024) முதல் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை என உறுதியளித்ததுடன், வற் வரி அதிகரிப்பினால் மாத்திரம் விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார். இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று முதல் 43 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளது.

Back to top button