இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தின் 4 மாத வருமானம் 268 மில்லியன் ரூபா!

2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 திகதி கொழும்பில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரம் தற்போதும் பெருமளவான மக்களால் பார்வையிடப்பட்டுவரும் நிலையில் கடந்த 6 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட்ட 500,000 வது பார்வையாளருக்கு பண வவுச்சர் வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, கொழும்பு தாமரை கோபுரத்தின் வருமானம் செப்டம்பர் 15, 2022 அன்று திறக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை 268 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 403 வெளிநாட்டு பிரஜைகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button