இலங்கை

கிளி.தர்மபுரம் பகுதியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.

சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட தகராறில், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button