இலங்கை

கோரிக்கைகளை 7 நாட்களுக்குள் அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் – சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் ஆகியவற்றுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில்

தங்களது கோரிக்கைகளை 7 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்ற முடிவை தமிழ் தேசிய கட்சிகள் எடுத்துள்ளன.

இதன்போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கடந்த இரவு இடம்பெற்றது.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் நில அபகரிப்பு மற்றும் அரசியல் யாப்பில் உள்ள மாகாணங்களுக்கான அதிகாரங்களை அமுலாக்குதல் உள்ளிட்ட 3 விடயங்களை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button