விளையாட்டுஇந்தியா

பும்ரா இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் இடம்பெறவில்லை

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.

உபாதையில் இருந்து மீண்டிருக்கும் அவரை மீண்டும் அணியில் இணைப்பதில் அவசரமில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. எனினும் பும்பரா முதல் ஒருநாள் போட்டிக்காக ஏற்கனவே கெளஹாத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆரம்பத்தில் பும்ரா இணைக்கப்படாத போதும் பாதியில் அவரது பெயர் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பும்ரா இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ரி20 தொடரின்போது அவர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன்காரணமாக T 20 உலகக் கிண்ணத் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button