இலங்கை

எரிபொருள் வீட்டில் சேமிப்பவர் கவனத்துக்கு

தயவு செய்து வீடுகளுக்குள் எரிபொருள் வைக்காதீர்கள்/ பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் பேணுங்கள்

அநுராதபுரம், எலயாபத்துவ குள வீதி, மான்கடவல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் (26.01.2023) இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் வீட்டின் அறையொன்றில் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரான முன்னாள் இராணுவ சிப்பாய்மாலை தனது முச்சக்கர வண்டியின் தாங்கியிலிருந்து எடுத்த பெற்றோல் பூளியை படுக்கை அறையில் வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதே போன்று யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகி உள்ளது. இளம் தம்பதிகள் கட்டிலின் கீழ் வைத்து சேமிக்கப்பட்ட எரிபொருளால் அவர்களின் செல்போன் சர்ச்சரின் மூலம் தீபரவி உடல் கருகி இறந்தனர்.

Back to top button