ஏனையவைஇன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன்(11.02.2023)

ராசிபலன்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். துர்கையை வழிபட  எதிலும் வெற்றியே ஏற்படும்.

ராசிபலன்

உங்கள் காரியங்கள் அனுகூலமாகும் நாள் . சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். மாலையில் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதரர்களால் சில சங்கடங் கள் ஏற்பட்டு தீரும் . பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

ராசிபலன்

இன்று திடீர் செலவுகள் ஏற்படும் நாள் . போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும். மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ராசிபலன்

இன்று மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படும் நாள் . வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உடல்நலனில் கவனம் தேவை. உங் கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் பெரிதும் குறை

ராசிபலன்

இன்று தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று சரபேஸ்வரரை தியானிப்பதன் மூலம் அதிக நன்மை களைப் பெறலாம்.

ராசிபலன்

உங்கள் தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். இன்று சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடு வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

ராசிபலன்

.இன்றைய உங்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்களின் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் அல்லது பெண்ணின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்பட லாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

ராசிபலன்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத் தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மன நிம்மதி உண்டாகும்.

ராசிபலன்

இன்றையநாள் உங்களுக்கு மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர் களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்தவை நிறைவேறும் நாள்

ராசிபலன்

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.  எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

ராசிபலன்

இன்று புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு பின் மேற்கொள்ளுவது நன்று . பிள்ளைகள் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள் . நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வர். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வீண் வாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு பல வகைகளிலும் அனுகூலமான பலன்களைத் தரும்.

ராசிபலன்

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிரத்தியங்கிரா தேவையை வழிபட பிரச்னைகள் நீங்கி மன அமைதி உண்டாகும் நாள் .

Back to top button