இலங்கை

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது – மதுவரி திணைக்கள தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிப்பு

நாளைய தினம் முன்னெடுக்கவிருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்கள தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட தங்களது கோரிக்கைக்கு ஒரு மாத காலப்பகுதியினுள் உரிய தீர்வை வழங்குவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் நிரோஷ் ஜயகொடி தெரிவித்துள்ளார். இதன்படி, தங்களது ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீரமானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button