இலங்கை

மற்றுமொரு மாணவியைக் காணவில்லை!

ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button