ஏனையவை

தித்திக்கும் இளநீர் பாயாசம் கேளரா ஸ்டைலில் செய்யலாம்!

பாயாசம் என்பது சைவ மக்களின் மிகவும் பழமையான ஒரு இனிப்பு வகையாகும். குறிப்பாக தென்னிந்திய வீட்டு விஷேடங்களில் பாயாசம் கட்டாயமாக இருக்கும். பாயாசங்களில் பல வகை உண்டு. அதில் பால் பாயாசம், சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம் மற்றும் அவல் பாயாசம். இவ்வாறு பலவகையான பாயாசங்கள் இருந்தாலும் இளநீர் பாயாசம் மிகவும் பிரபலமானது. ஆகவே கேரளா ஸ்டைல் இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

இளநீர் – 2

பால் – ½ லிட்டர்

சர்க்கரை – 150 கிராம்

மில்க்மெய்ட் – 1 கப்

பருப்பு – 2 கரண்டி

முந்திரி – 10

பாதாம் – 10

பிஸ்தா – 10

ஏலக்காய் தூள்

பச்சை கற்பூரம் -1 சிட்டிகை

நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இளநீரை சீவி அதில் இருக்கும் தண்ணீர் மற்றும் வழுக்கையை எடுத்து தனித்தனியாக இரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு இளநீரில் இருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

பின்பு மற்றொரு இளநீரில் இருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு இளநீர் தண்ணியை ஊற்றி அதை நன்கு அரைக்கவும்.

பிறகு அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு சுட வைக்கவும்.

பால் நன்கு காய்ந்தவுடன் அதில் மில்க்மெய்டை ஊற்றி அது நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் அதை கலந்து விடவும்.

அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அது கரையும் வரை அதை நன்கு கிளறி விடவும்.

பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

பிறகு அதில் சாரை பருப்பு மற்றும் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வழுக்கையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நன்கு ஆற விடவும்.

நெய் சுட்டபின் அதில் முந்திரியை போட்டு அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். பின்பு நாம் ஆற வைத்திருக்கும் பால் ஆறியதை உறுதி செய்த பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கை மற்றும் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து இந்த இளநீர் பாயாசத்தை ஃபிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை வைக்கவும்.

2 மணி நேரத்திற்கு பிறகு அதை ஃபிரிட்ஜில்லிருந்து எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் பாதாம் துண்டுகளை தூவினால் சுவையான பாயாசம் தயார்.

Back to top button