இலங்கை

கடலூரில் மனைவிக்காக கப்பல் வடிவில் வீடு கட்டி அசத்திய என்ஜினீயர்!

என்ஜினீயர் ஒருவர் கடலூரில் தனது மனைவிக்கு கப்பல் வடிவில் வீடு கட்டி கொடுத்த சம்பவம் ஒன்று பலராலும் பேசப்பட்டு வருகின்றது. கப்பலில் செல்ல வேண்டும் என நினைத்த மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவே அவர் இதனை செய்ததாக கூறப்படுகின்றது.

லூரில் சிங்காரத்தோப்பை சேர்ந்த சுபாஷ் (வயது 42) என்ற நபரே தனது மனைவியான சுபஸ்ரீ (41).என்பவருக்கே இவ்வாறான கப்பல் ஒன்றை கட்டியதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மரைன் என்ஜினீயரான சுபாஷ், கடந்த 15 ஆண்டுகளாக சரக்கு கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இருப்பினும் மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என நினைத்த சுபாஷ், தனது மனைவி வாழ்நாள் முழுவதும் கப்பலில் தங்கியிருப்பதை போல் உணர வேண்டும் என்பதற்காக கப்பல் வடிவிலேயே வீடு கட்டி பரிசளிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கடலூர் வண்ணாரப்பாளையத்தில் இடம் வாங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்ட தொடங்கினார். கட்டப்பட்ட வீடு அதன்படி கப்பலை சுற்றிலும் தண்ணீர் கிடப்பது போலவும், படிக்கட்டுகள், அறைகள் என அனைத்தும் கப்பலில் இருப்பது போன்று கட்டி முடித்துள்ளார். தற்போது பிரமாண்ட கப்பல் போன்று தோற்றம் அளிக்கும் அந்த வீட்டை தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கேப்டன் அமர்ந்து கப்பலை ஓட்டும் விதமாக ஒரு அறையும் அமைத்து அசத்தியுள்ளார். இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் அந்த வீட்டை பார்க்கும் போது கடலில் கப்பல் செல்வது போன்றே காட்சியளிக்கிறது. கப்பல் போன்று கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Back to top button