இலங்கை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து ஜனாதிபதி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையை குறிப்பிட்ட ஓர் மாதத்தில் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்ட ரீதியாக உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து ஓர் மாதத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதி விசேட சந்தர்ப்பங்களைத் தவிர பரீட்சை மாதத்தை மாற்றாதிருப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Back to top button