இலங்கை

இரண்டு அரச திணைக்களங்கள் மூடப்பட்டதாக வெளியான வர்த்தமானி!

தொலைத்தொடர்புத் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை ஆகிய இரண்டு அரச திணைக்களங்களை கலைக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் குறித்த இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் மாநகராட்சியாக மாற்றப்பட்டு 1990 பிப்ரவரி 6ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறை ஆகியவை கலைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Back to top button