ஆன்மிகம்

சுக்கிர சேர்க்கையால் பண வரவும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் வாய்ப்பை அடையப்போகும் 3 ராசிக்காரர்கள்!

கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் பொதுவாக ராசிப்பலன்கள் கணிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஜூலை 01ம் திகதி முதல் 20 வருடங்கள் வரை சூரியனின் ஆதிக்கம் சிம்ம ராசியில் விழுகின்றது. இவற்றையும் தாண்டி அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் பெயர்ச்சி அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த பெயர்ச்சி சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் உதயமாகின்றது அந்தவகையில் பண வரவும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் வாய்ப்பை அடையப்போகும் 3 ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. கடக ராசிக்காரர்கள் – இந்த கலியுகத்தில் பணத்திற்காக ஓடும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. என்ன தான் உழைத்தாலும் லக் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. இதன்படி, சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவர்களின் நல்ல எண்ணத்தினால் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

2. மேஷ ராசிக்காரர்கள் – நீண்ட காலம் உங்களுக்கு டிமிக்கி கொடுக்கும் ராசிக்காரர்கள் இந்த மாதம் இறுதியில் உங்கள் பணத்தை திருப்பி தருவார்கள் தொழிலில் பலத்த முன்னேற்றம் இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள், காதலர்களாக இருப்பவர்கள் இந்த வருடம் உங்களின் வருடமாக மாறும். கவலைப்படாமல் இனி நிம்மதியாக இருக்கலாம்.

3. துலா ராசிக்காரர்கள் – இந்த பெயர்ச்சியால் துலா ராசியில் பணம் புரளும். இனி உங்களுக்கு கஷ்டம் இருக்காது. புதிய தொழில் துவங்கும் முயற்சியில் இருப்பவர்கள் இந்த வருடம் நல்லது நடக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தைகளால் நல்ல செய்தி வீடு தேடி வரும்.

Back to top button