ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்கள் அடுத்த 10 நாட்கள் அதிஷ்டசாலிகள் தான்!

புதன் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் . இந்த புதன் கல்வி, புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு ஜூன் 24 ஆம் திகதி நுழைந்தார். புதன் மிதுன ராசியில் நுழையும் போது ஏற்கனவே அந்த ராசியில் சூரியன் பயணித்து வருவதால் புதாதித்ய ராஜயோகம் உருவானது. அத்துடன் புதன் பெயர்ச்சியால் பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் மற்றும் பத்ர ராஜயோகம் என்ற இரு சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகின. புதன் பெயர்ச்சியால் உருவான 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது நிதியில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவை வழங்குவார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது ஊடகம், எழுத்து, கலை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது புதிய வேலை வாய்ப்புக்களைக் கொண்டு வரும். இதுவரை முதலீடு செய்து வந்தால் அதிலிருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்கள் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது காதல் வாழ்க்கையை வலுப்படுத்தும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் உருவான யோகங்களால் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. விடாமுயற்சியுடன் செய்யும் வேலை உயர் அதிகாரிகளை ஈர்க்கும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

Back to top button