இலங்கை

யாழில் இளைஞர் ஒருவர் சமூக சீர்கேடால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு.

இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (26) அன்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவ் இளைஞன் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருள் பாவித்த நிலையிலே உயிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்கள் ஐஸ் போன்ற ஆபத்தான போதைப்பொருட்கள் பாவித்து உயிரிழப்பது நம் தமிழ் சமுதாயத்தில் அதிகரித்து வருவது விழிப்புணர்வு இன்மையே காரணமாகும். நம் சமுதாயத்தில் மனநல ஆலோசகர்களும் சமூக சேவையாளர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

Back to top button