இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு இரத்மலானையிலிருந்தான உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்!

கொழும்பின் இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் இருந்து ஒரு மணிநேரம் பத்து நிமிடத்தில் குறித்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை வேளைகளில் குறித்த விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தின் ஊடான பயணத்துக்கு பயணி ஒருவருக்கான ஒரு வழிக்கட்டணமாக 22 ஆயிரம் ரூபாவும் இரு வழிக்கட்டணமாக 41 ஆயிரத்து 500 ரூபாவும் அறவிடப்படுகிறது. அத்துடன், பயணி ஒருவர் அதிகபட்சமாக 7 கிலோகிராம் எடையை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Back to top button