ஏனையவை

ஆடி மாதத்தில் சூரியனும், புதனும் ஒன்று சேரும் நேரத்தில் யாருக்கெல்லாம் புதாதித்ய யோகம் தெரியுமா?

தற்போது கடகராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான் புதன் பகவானுடன் சேருகிறார். இதனால், ஆடி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டமும், புதாதித்ய யோகமும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.

மேஷம் – உங்களுக்கு நேர்மறையன செய்திகள் தேடி வரப்போகிறது. மேலும், பணி செய்யும் இடத்தில் உயர் பதவிகள் கிடைக்கப்போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பணி புரியும் இடத்தில் சக ஊழியர்களின் உத்துழைப்பு பெருகும். சாதகமான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

கடகம் – கடக ராசிக்காரர்களே உங்கள் வாழ்க்கை சிறக்கப்போகிறது. பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உடல் நலப் பிரச்சினை தீர போகிறது. குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் தாம்பத்திய பிரச்சினை தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நிம்மதி பெருகும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு நிதி நிலைமை சீராக இருக்கப்போகிறது. பண பலன்கள் பெற இருக்கிறீர்கள். வணிகத்தில் சிறப்பான பலன்கள் தேடி வரப்போகிறது. பணி மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களே உங்களுடைய தொழில் சிறக்கப்போகிறது. நல்ல செய்திகள் வரும். பணி செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது. சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்கு பல நன்மைகள் தேடித் தரப்போகிறது. செய்யும் காரியத்தை கவனமுடன் செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பிரச்சினை ஏற்படும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

Back to top button