ஏனையவை

பாபா வங்காவின் 2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு குறித்து அதிர்ச்சி கணிப்பு!

பாபா வங்காவின் 2024ம் ஆண்டு கணிப்பு அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. 2024-ல் பாபா வங்காவின் தீர்க்க தரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி மரணம் அடைந்தார். பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​ குறிப்பாக பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அணு உலை விபத்து, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர் என அரங்கேறி வருகின்றது. மேலும இந்த ஆண்டும் இவர் கணித்துள்ள சில சம்பவங்கள் தற்போது அரங்கேறிக் கொண்டு வருகின்றனர். வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இவர் கூறியது போன்று ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத தாக்குதல், பிரிட்டன் ராசியின் மரணம் என்று அனைத்தும் நடந்து வருகின்றது. 2024ம் ஆண்டில் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் குவாண்டம் கணினிகள் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகோலை செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும். உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வரும் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவதுடன், அவரது கேட்கும் திறமை பறிபோவதுடன், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் ஹக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Back to top button