இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு சென்னையை தொடர்ந்து மதுரையில் இருந்தும் விமானசேவை!

இந்தியாவின் தமிழகத்தின் மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றது. அதேவேளை சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை தினசரி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை ஆரம்ப்பிக்கப்பட்டால் அது பெரும் வரப்பிரசாதமாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button