ஆன்மிகம்

குருவின் வக்ர பெயர்ச்சியால் யோகத்தை அடையும் 4 ராசிகள்

ஜோதிட ரீதியில் குரு கிரகமானவது வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியை மாற்றும் நிலையில், 12 ராசிகளின் சுழற்சியை முடிப்பதற்கு 12 வருடங்கள் எடுத்துக் கொள்கின்றது. 12 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மேஷ ராசியில் குரு சஞ்சரிக்கும் நிலையில் அடுத்தாண்டு மே மாதம் 1 ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். ஆனால் வரும் செப்டம் 4ம் தேதி வக்ர நிலைக்கு செல்கின்றார். குருவின் இந்த வக்ர பெயர்ச்சியால் சில ராசியினர் அதிர்ஷ்ட நிலையை அடைவார்கள். அந்த வகையில் பேரதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்
குருவின் இந்த வக்ர சஞ்சாரத்தால், மேஷ ராசியினருக்கு சாதமான சூழ்நிலை இருப்பதுடன், வருமானமும் அதிகரித்து, பெரிய லாபம் கிடைக்கும். உங்களது குடும்ப சூழ்நிலையிலும் மகிழ்ச்சி ததும்பும்.

மிதுனம்
குருவின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகளைத் தருவதோடு, அரசு பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு பின்பு வெற்றி கிடைப்பதுடன், வருமானமும் உயரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வும், வியாபாரத்தில் லாபமும், அதிர்ஷ்மும் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் குருவின் இந்த வக்ர பெயர்ச்சியினால் அதிர்ஷ்ம் அடைவதுடன், உத்தியோகத்தில் பதவி உயர்வும் பெறுவார்கள். புதிய வேலைபாப்பு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கடின உழைப்பின் பலனை முழுமையாக பெறுவீர்கள்.

மீனம்
இந்த குரு வக்ர பெயர்ச்சியால் மீன ராசியினருக்கு மங்களகரமானதாக இருப்பதுடன், வாழ்வில் செழுமையும், பெருமையும் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிப்பதுடன், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.

Back to top button