இலங்கை

இலங்கையில் ஆகஸ்ட் 7ஆம் திகதிக்குள் வட்டியில்லா கடன் வசதிக்கு விண்ணப்பிக்குமாறு அவசர அறிவிப்பு

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSL) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம் தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா நிதி உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் திகதிக்குள் தகுதியுள்ள அனைவரையும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. IFSL திட்டம் குறிப்பாக 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் A/L தேர்வை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் www.studentloans.mohe.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button