இலங்கை

இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி தொடர்பில் கோட்டாபய வழங்கிய பதில்

சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சனல் 4 வெளியிட்ட வீடியோவானது, 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிரசாரம் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் இதே தொலைக்காட்சி வெளியிட்ட முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button