இலங்கை

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விசேட நிபுணர்கள் நடாத்திய கண்காணிப்பு சுற்றுப் பயணத்திற்கு அமைய இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையை சிறுகாலம் பிற்போடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Back to top button