இலங்கை

2025 அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் விசா ; கொழும்புத் தூதரகத்தின் அறிவிப்பு

வரும் 2025 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் ஒக்டோபர் 04, 2023 அன்று விண்ணப்பங்களுக்காகத் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பன்முகத்தன்மை விசா திட்டம் 2024 க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 07, 2023 இரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025க்கான பன்முகத்தன்மை விசா திட்டம் காகித உள்ளீடுகளை அனுமதிக்காது மற்றும் அதன் இணையத்தளம் https://dvprogram.state.gov வழியாக மட்டுமே விண்ணப்பங்களை ஏற்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. அதேவேளை ஒவ்வோர் ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் 50,000 க்கும் மேற்பட்ட தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், நிரந்தர வதிவிடத்தைப் பெற அனுமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button