இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி; காத்திருந்த தவளை!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14) ஐஸ்கிரீம் குடிக்க சென்றவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. சுகாதார பரிசோதகர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு அமைய குறித்த குளிர்பான விற்பனை நிலையம் சீல்வைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Back to top button