இலங்கை

சஜித்துடன் இணைந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவர்

முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று ( 14.02.2024) பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில காலங்களாக சஜித்துக்கு ஆதரவு வழங்கி இருந்த நிலையிலேயே தற்போது கட்சியி்ல் உறுப்பினராக இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள மூன்றாவது பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button