இலங்கை

கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு! களமிறக்கப்பட்டுள்ள பெருமளவு பொலிஸார்

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்மொழியப்பட்டுள்ள அடிமை தொழிலாளர் சட்ட திருத்தங்களை உடன் மீளப்பெறவும், EPF மற்றும் ETFஐ கொள்ளையடிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் இணைந்துள்ளன. போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பெயரில் உட்பட தொழிலாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்த வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button