இலங்கை

கொழும்பு பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த பெரும் சோகம்! இரு மாணவிகள் மரணம்

கொழும்பு வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார். பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டியிருந்த மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Back to top button